Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரும் 6 ந் தேதி முதல் கோமாரி தடுப்பூசிப் பணிகள் துவக்கம்: ஆட்சியர் ச.உமா தகவல்

நவம்பர் 04, 2023 04:01

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி 2023-ஆம் ஆண்டு நவம்பர் 6 முதல் 21 நாட்கள் நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,98,400 கால்நடைகளில் 7,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2,91,400 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைக் கொண்டு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்தப்படும். அந்தந்த அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் எடுத்துரைக்கப் படவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர் களால் குறிப்பிடப்படும் தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசி போட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் முன்கூட்டியே தடுப்பூசி போடப்படும் விவரம் நன்கு விளம்பரப்படுத்தப்படும்.

இத்தடுப்பூசிப் பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, நாமக்கல் மாவட்ட விவசாய பெருமக்கள் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அழைத்துச் சென்று 06.11.2023 முதல் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா   கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்